Ad Widget

யாழில் விபத்து – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

யாழ். கைதடி – கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இவ் விபத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை உடற்கல்வித்துறை ஆசிரிய பயிலுநரான கிளிநொச்சியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கிருஷ்ணன் றீகன் என்பவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலத்தில் நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts