Ad Widget

யாழில் மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வு

பாடசாலை மாணவரிடையே தேசிய இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வொன்று யாழ் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தேசிய ரீதியில் முதலாவது தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதான பொங்கல், பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. மேலும் கடந்த காலங்களில் மாணவர்களிற்கிடையே நடாத்தப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழிப்போட்டிப்பரிட்சையில் பங்குபற்றி சித்தியடைந்த மாணவர்களிற்கான சான்றிதழ்களும் கௌரவிப்புகளும் இடம்பெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அகிலதாள், மற்றும் சர்வ மத தலைவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மூவின மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

pongal-2016-2

pongal-2016

Related Posts