யாழ். பருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த லோகநாதன் அம்பிகாதேவி (வயது 52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் திருமணம் செய்திராததன் காரணமாக அவரது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.