Ad Widget

யாழில் போதையற்ற தேசம் விழிப்புணர்வு நிகழ்வுகள்

ஜனாதிபதியின் போதையற்ற தேசம் என்ற சிந்தனைக்கமைய வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அமைச்சானாது விசேட செயற்திட்டம் ஒன்றை பாடசாலை மாணவர்களிடத்தில் ஆரம்பித்துள்ளது.

central-college

இதன் முதற்கட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விசேட போதைப்பொருள் விழிப்புனர்வு நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

வடமாகாண புனர்வாழ்வு இணைப்பு காரியாலயத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போதைபொருள் பாவனையின் தாக்கம் தொடர்பாகவும் அவற்றிலிருந்து மாணவர்களை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாகவும் மாணவர்கள்,பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு விளக்கங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் விழிப்புனர்வு நாடகங்களும் இடம்பெற்றது.

இது தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Related Posts