Ad Widget

யாழில் ‘பிரித்தானிய பேரவை’யின் கிளை அலுவலகம் திறப்பு

British Councilபிரித்தானிய பேரவையின் கிளை அலுவலகமொன்று யாழ்., றக்கா வீதியில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்ட்டின் டேவிட்ஸன் இணைந்து இந்த பேரவையைத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தெற்காசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன் றோமன், மேற்படி நிறுவனத்தின் இலங்கைக்கான இயக்குநர் கேய்த் டேவிஸ், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வே.மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts