Ad Widget

யாழில் பாடசாலை மாணவன் கடத்தல் – 03 பேர் கைது

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11 மாணவனை ஆட்டோவில் கடத்த முற்பட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவனின் சகோதரியின் கணவன் மற்றும் அவரது நண்பர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை முடிவடைந்த பின்னர் நண்பர்களுடன் பற்றிக்ஸ் வீதி வழியாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது அந்த வீதியில் ஆட்டோவில் நின்ற 3 இளைஞர்கள் பாடசாலை மாணவனை கடத்தி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

ஆட்டோவின் இலக்கத்தை அவதானித்த மாணவனின் நண்பர்கள் பாடசாலை அதிபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஆட்டோவை பொலிஸார் மடக்கிப் பிடித்து மாணவனை மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் பின்னர் 3 இளைஞர்களையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளதுடன், இன்று (04) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதாக பொவிஸார் தெரிவித்தனர்

Related Posts