Ad Widget

யாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் ; ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கும்பல்

யாழில் உள்ள யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் நகரில் உள்ள யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்குள் செவ்வாய்க்கிழமை (22) அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை ஒருவர் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரொருவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் ஆசிரியர் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த இரு ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் நோக்குடன் குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று , சம்பவம் தொடர்பில் கேட்டறிய முற்பட்டவேளை , பழைய மாணவர்கள் ,பாடசாலை நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் , ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து , அவர்களின் ஒளிப்பட கருவிகளை பறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

தமது கல்லூரி தொடர்பில் எந்த செய்தியும் வெளிவர கூடாது, என அச்சுறுத்தி ஊடகவியலாளர்களை மடக்கி பாடசாலை வளாகத்தினுள் தடுத்து வைத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்து பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் ஊடகவியலாளர்களை அவர்களிடம் இருந்து விடுவித்தனர்.

இந்நிலையில் , தம்மை அச்சுறுத்தி தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்திய மாணவனின் தந்தை தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

????.????????? ????????????? ????????? ???????? ???????? ???? ?????????!

Related Posts