Ad Widget

யாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளி வரையிலான காலப்பகுதியில் விவசாயக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விவசாயம் சார் திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கமைத்துள்ள இந்த கண்காட்சி நிகழ்வினை தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டள்ளது.

Related Posts