Ad Widget

யாழில் தனியார் வங்கியின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் (கொமர்ஷல்) பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு நிரந்தரக் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த வேறு கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் கிளையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts