யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
இலங்கை சுகாதார திணைக்களத்தினால் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கிராம அலுவர்கள் பிரிவு ரீதியாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்காக கிராம மட்டங்களில் டெங்கு ஒழிப்புக் கூட்டங்களையும் நடத்தவுள்ளனர்.
இதேபோல் யாழ்.மாவட்டத்தில் கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றியளித்திருந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.