Ad Widget

யாழில் சக்தி வாரம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சக்தி வாரம் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

hindu-lades-colleage

“நாளைய சமூகத்திற்காக இன்றே நாம் சக்தியை சேமிப்போம்” எனும் தொனிப் பொருளில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இன்று (11) காலை சக்திவார அனுஷ்டிப்புக்கள் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடாசலையின் சக்தி கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள், கலந்து கொண்டனர். இதில் சூழல் மாசடைதல் தொடர்பாகவும் மின் சக்தியை சிக்கனமாக பாவிப்பது தொடர்பாகவும் மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வசேட கருத்துரைகள் இடம்பெற்றது.

மேலும் சக்தி வாரத்திற்கான சத்தியப்பிரமாணமும் மாணவிகளால் செய்யப்பட்டது.

Related Posts