யாழில். மதுபான நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பத்தலைவர் மாரடைப்பு காரணமாகே உயிரிழந்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த மதுபான நிலையத்தில் பணிபுரிந்து வந்த அச்சுவேலி இடைக்காடு பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கௌரீசன் (வயது -38) என்பவர் நேற்று (திங்கட்கிழமை) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது மதுபான சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளி பதிவில் குடும்பத்தலைவர் நெஞ்சை இறுகப் பிடித்தவாறு வீழ்வது பதிவாகியுள்ளது.
குடும்பத்தலைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகுந்த முதலுதவி வழங்கப்படாததால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.