Ad Widget

யாழில் காந்தியின் ஜனன தினம்

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 145ஆவது பிறந்த தினமும் சர்வதேச அகிம்சை தினமும் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

kanthy-ganthy

நேற்று பி.ப 4மணிக்கு யாழ்.ஆஸ்பத்திரி வீதியிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் காந்தீயம் பத்திரிகை வெளியீடும் இடம்பெற்றது. மேலும் இந்த நிகழ்வில் சங்கத் தலைவர் தி.இராசநாயகம்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும் காந்தீயம் ஆசிரியர் சாந்தன் சத்தியகீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Posts