Ad Widget

யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக தனது உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய குறித்த நபர் அக்காணியினை மூன்று பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை தனது நபருக்குக் கொடுத்துள்ளதோடு மற்றுமொரு பகுதியை வங்கியிலும் ஈடுவைத்துள்ளார்.

அத்துடன் மீதிப் பகுதியினை தனது உறவினருக்கு நன்கொடையாகக் கொடுத்து,அதனை மீள அறுதியாகப் பெற்றுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts