Ad Widget

யாழில் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல்!

Human_rightsதினக்குரல் பத்திரிகையின் யாழ். பிராந்திய பதிப்பின் செய்தியாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.

தங்களை இரகசியப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திய இருவர், குறிப்பிட்ட இரண்டு செய்தியாளர்களின் இருப்பிடம் முகவரி மற்றும் விபரங்களைப் பெறுவதற்குப் பல தடவைகள் முயற்சித்துள்ளதாக யாழ். தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் வி.அற்புதானந்தன் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட இரண்டு செய்தியளர்களும் யாழ். தினக்குரல் பத்திரிகை ஆசிரியரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிட்டுள்ளனர்.

Related Posts