யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றினை தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து குறித்த உணவகம் சுகாதார அதிகாரிகளினால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்கு கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.