Ad Widget

யாழில் இளம் வானொலிஅறிவிப்பாளரான பெண் மீது தாக்குதல்

யாழ். மாவட்டத்திலுள்ள வானொலி அறிவிப்பாளரான பெண் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியில் வைத்து இரவு 07.00 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான 23 வயதான குறித்த யுவதி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, அரியாலை பகுதியில் வைத்து அவர் சென்ற மோட்டார் சைக்கிளை தள்ளிவிழுத்தியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்வதற்காக முயற்சித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் படுகாயமடைந்த அவர் அருகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts