Ad Widget

யாழில் இருவேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு

கொடிகாமம் மிருசுவில் பகுதியிலுள்ள சென்.நீக்கிலஸ் தேவாலய சேமக்காலையிலிருந்து செவ்வாய்க்கிழமை (17) ஜி – 400 ரக கைக்குண்டுகள் 18 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதற்காக குழியொன்றை தோண்டியபோது, அந்தக் குழிக்குள் இருந்து இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குண்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டுவில் வடக்குப் பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (17), மோட்டார் குண்டு மற்றும் எறிகணை ஆகியன மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

காணியொன்றை துப்பரவு செய்தவர் வழங்கிய தகவலுக்கமைய அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸாரும் இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினரும், குண்டுகளை மீட்டனர்.

இராணுவத்தினர் அந்தக் குண்டுகளை மட்டுவில், வண்ணாத்திப்பாலம் பகுதியில் வைத்து வெடிக்க வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts