Ad Widget

யாழில் இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம், கோட்டையில் இராணுவத்திற்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கோட்டையின் தெற்குப் புறமான பண்ணை கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கக்கூடாதென வலியுறுத்தியும் தொல்பொருளியல் திணைக்களம் இராணுவத்திற்கு குறித்த காணியை வழங்கக் கூடாது எனத் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் தமிழரின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழிக்கப்படாது பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

யாழ்.கோட்டைப் பகுதியானது வட.மாகாணத்தில் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குவதுடன், அருகில் யாழ்ப்பாண பொது நூலகம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு என்பன அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts