Ad Widget

யாழில் இன்று போராட்டம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்தே இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டங்களை வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிரஜைகள் குழு, ‘நாங்கள்’ இயகத்தினர் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts