Ad Widget

யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா!

இம்முறை தேசிய பொங்கல் தின நிகழ்வுகள் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

நேற்று காலை யாழ் பலாலியில் அமைந்துள்ள சிறி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் கலந்துகொண்டு விசேட வழிபாடுகழில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் தின கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், திருமதி விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்ட பிரதம அதிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் இந்துசமய அறநெறி பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

pongal-2016-7

pongal-2016-6

pongal-2016-5

pongal-2016-4

pongal-2016-3

Related Posts