Ad Widget

யாழில் இடம்பெறவுள்ள வெசாக் நிகழ்வுகள்!

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வுகள் நாளை 2018.04.29. முதல் 2018.05.01 வரையில் யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக புனித தாதுக்களை காட்சிப்படுத்தல், வெளிச்சகக் கூடுகளை காட்சிப்படுத்தல், பக்திப்பாடல்களை இசைத்தல் மற்றும் மூன்று நாட்களுக்கு அன்னதானம் வழங்கல் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts