Ad Widget

யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் திடீர் சோதனை : ஒருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் 4 கிலோ கேரள கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா போதைத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம்(ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 70 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts