Ad Widget

யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செவிசாய்க்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வலி.கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் தொடர்ச்சியாக அங்கீகாரம் அளித்துள்ளார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் சில விடயங்களை நாம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம். அதாவது, இனப்பிரச்சினைக்கு தீர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு மக்கள் சொந்த நிலங்களில் மீளக்குடியமர வேண்டும், கைதிகள் விடுதலையும் என்பன முக்கியமாக கூறியுள்ளோம்.

மேலும் வெளிநாடுகளில் இருந்தும், புலம்பெயர் தமிழரிடம் இருந்தும் முதலீடுகளை பெற்று ஒரு திட்டங்களின் அடிப்படையில் முதலீடுகளை செய்வதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டு பொருளாதார வளமும் பலமடைந்து புதிய சமுதாயத்தை கட்டியெழுப்பலாம்.

இம்முறையும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தொடர்ச்சியாகப் அங்கீகாரத்தை அளித்துள்ளார்கள் எனவே அவர்களுக்காக நாம் அயராது பாடுபடுவோம். அதற்கு ஆதரவாக ஜனநாயக ரீதியாக யார் எங்களுடன் பேசவேண்டுமானாலும் பேசலாம், நாங்களும் எங்களுடைய தேவைகளை அறிந்து யாரின் ஆலோசனைகளை பெற வேண்டுமோ அவர்களுடன் பேச நாமும் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார்.

Related Posts