நல்லூர் யமுனா ஏரியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் கோவில் வீதியைச் சேர்ந்த மருதமுத்து கோவிந்தன் (வயது-27) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.
யமுனா ஏரியில் கடந்த 19ஆம் திகதி தவில் வித்துவானான முதியவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இன்று இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளமை அந்தப் பகுதி மக்கள் இடையே அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.