Ad Widget

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்!

வேகமாக விரைந்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி தூணுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

இதில் ஒருவர் அபாயகட்டத்தில் இருக்கிறார்.

நேற்று புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் இளவாலை விளானுக்கு அண்மையாக இடம்பெற்றது.

இந்த விபத்தில் மாவை கலட்டியைச் சேர்ந்த இ.மிகுந்தன் (வயது 26), பருத்தித்துறையைச் சேரந்த கெ.பிரசாந் (வயது 24) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஆபத்தான கட்டத்தை எட்டியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Related Posts