Ad Widget

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்

கோண்டாவில் மேற்கு உப்புமடம் சந்தியில் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனை வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

து.குயிலன் (வயது 5) என்ற சிறுவனே மேற்படி சம்பவத்தின் போது படுகாயமடைந்தவராவார்.

சிறுவனை மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பிச்சென்றுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts