Ad Widget

மோசடியில் சாதனை படைத்த மகிந்த அரசு – மைத்திரி

மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசு மோசடிகளில் உலக சாதனை படைத்திருப்பதாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

maithripala-sirisena

சிலாபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் புகையிரத பாதையை நிர்மாணிப்பதற்கு ஒரு கிலோமீற்றருக்கான செலவு 44 மில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் ஒரு கிலோமீற்றர் புகையிரத பாதையை நிர்மாணிக்க 300 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என்று அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் அரசு பாரிய மோசடிகளை புரிவதில் உலக சாதனை படைத்திருக்கிறது.

இதன் மூலம் அரசு பெருமளவில் தரகு பணத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Posts