Ad Widget

மைத்திரி – மஹிந்த 9ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்றாக மேடையேறக்கூடும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஒன்றாக மேடையேறுவார்கள் என பங்காளிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே, நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.ம.சு.முன்னணியினர் மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டனர்.

Related Posts