Ad Widget

மைத்திரி – சந்திரிகா இரகசியப் பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினர்.

மூடிய அறைக்குள் இருவரும் மட்டுமே கலந்து கொண்ட இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிகாவின் 70 ஆவது பிறந்தநாளாகும். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன.

இதன்போதே இருவரும் தனியாக சந்தித்துப் பேசிக்கொண்டனர். இருவரினது பேச்சும் மஹிந்த ராஜபக்‌ஷ வேட்பு மனுவை மையமாகக் கொண்டு அமைந்தது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts