Ad Widget

மைத்திரி ஆட்சியிலேயே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: அங்கஜன்

நாட்டில் காணப்பட்ட புரிந்துணர்வின்மையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருந்ததென குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தற்போதைய தேசிய அரசாங்கத்திலேயே தமிழர்களுக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அதிகார சபை அங்குரார்ப்பணம் மற்றும் உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீண்டகாலமாக காணப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் காணிப்பிரச்சினை என்பன, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான நல்லாட்சியில் பெரும்பாலும் நிவர்த்திக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அங்கஜன், இவை நல்லிணக்கத்திற்கான முதல் படியென தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிய அரசியல் யாப்பினை எதிர்ப்பின்றி உருவாக்கக்கக்கூடிய சூழ்நிலையும் தற்போதே ஏற்பட்டுள்ளதாகவும் அங்கஜன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts