Ad Widget

மே மாதம் சைவப்புலவர் பரீட்சை

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் சைவப்புலவர், இளம் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலர் சங்கத்தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

மே முதலாம் திகதி தொடக்கம் 4ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

சைவப்புலவர் பரீட்சைக்கு 124 பரீட்சார்த்திகளும் இளம் சைவப்புலவர் பரீட்சைக்கு 167 பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்துக்கு சைவப்புலவர் சு.செல்லத்துரை, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சைவப்புலவர் ச.தில்லைநாதன், திருகோணமலை மாவட்டத்துக்கு சைவப்புலவர் க.பரசுராமன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோர் பொறுப்பாக இருப்பார்கள்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் வகுப்புக்கள் பரீட்சார்த்திகள் விண்ணப்பித்த மாவட்டங்களில் நடைபெறுகின்றன. ஆர்வமுடையவர்கள் இந்த கற்கைநெறியை தொடரமுடியும்.

பரீட்சை சம்பந்தமான மேலதிக தகவல்களை பெறவிரும்புவோர் இல. 153 கே.கே.எஸ்.வீதி கொக்குவில் என்னும் முகவரிக்கு தபால் மூலமும், 021 – 2223458 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

Related Posts