Ad Widget

மேலும் சில சேவைகள் அத்தியாவசியமானவையாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமானவை என அடையாளம் காணப்பட்ட சில சேவைகளுக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம் தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் வாழ்க்கையை தடையின்றி கொண்டு செல்வதற்காக இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts