Ad Widget

மேடையில் குடும்ப விடயம்; குழம்பிய பிரசாரம்

தேர்தல் பிரசார மேடையில் குடும்ப விடயம் கதைக்கப்பட்டமையால் சம்பந்தப்பட்ட தரப்பினரால் குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்ட சம்பவம், வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டம் யாழ்.நகரப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, பிரசாரத்தில் ஈடுபட்டவர், இன்னொரு கட்சியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் 21 வயதுடைய பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடியுள்ளார். அவருக்கு பல தகாத தொடர்புகள் இருக்கின்றன என பிரசாரம் செய்தார்.

குறிப்பிட்ட 50 வயதுடைய நபரின் நெருங்கிய உறவுக்காரர்கள், பிரசாரம் மேடை அமைக்கப்பட்ட பகுதியில் வசித்தமையினால் தங்கள் உறவுக்காரரை மேடையில் அவதூறாக பேசியதை எதிர்த்து பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டதுடன், தொடர்ந்து பிரசாரம் நடத்த அவர்கள் அனுமதிக்கவில்லை.

அவர்களுடன் இன்னும் ஆட்கள் சேர்ந்ததையடுத்து, குறித்த பிரசாரத்தை நிறுத்திவிட்டு பிரசாரம் செய்தவர்கள் சென்றுவிட்டனர்.

Related Posts