கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, இன்று காலை காலமானார்.
தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கட்டடம் ஒன்றின் நிர்மாண பணியின் போதே இவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு படையினரை கைதுசெய்தமை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சுமித் மாணவடு மலேஷியாவின் உதவி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றினார்.