Ad Widget

மெனிக்பாம் மூடல் குறித்து ஐ.நா. எச்சரிக்கையுடன் வரவேற்பு!

போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த மெனிக் பாம் முகாமில் எஞ்சியிருந்த மக்களும் முகாமைவிட்டு வெளியேறிய நிலை யில், அந்த முகாம் மூடப்பட்டாலும், இலங்கை அரசு, நாட்டில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் முறையாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலைக்கு விரைவில் உரிய தீர்வுகாணுமாறு ஐ.நா.மன்ற மனிதநேய அலு வலகம் வலியுறுத்தியிருக்கின்றது.

மெனிக்பாம் மூடப்பட்டதை வரவேற்றுள்ள ஐ.நா.மன்ற மனிதநேய அலுவல்களுக்கான இலங்கை ஒருங்கிணைப்பாளர், சுபினாய் நந்தி, விடுத்துள்ள அறிக்கையயான்றில், இந் தச் சம்பவம் இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அங்கு போரின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வை முடிபுக்குக் கொண்டு வரும் ஒரு மைல்கல் போன்ற சம்பவம் என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் இன்னும் பலர் தத்தம் வீடு களுக்கு திரும்ப முடியாத நிலை இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நந்தி, அவர்களது பிரச் சினைக்கு ஒரு அவசரத்தீர்வு காணப்பட வேண் டும் என்று கூறியிருக்கிறார். மெனிக்பாம் முகாமிலேயே எஞ்சியிருந்த கடைசி தொகுதி மக்களான, கேப்பாபிலவு கிராமவாசிகள், அவர்களது கிராமம் இன்ன மும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்ப தால் அங்கு திரும்பிச்சென்று தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதைப்பற்றி கவலை தெரி வித்துள்ள அவர் மேலும், அரசுக்கு சொந்த மான வேறிடங்களுக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, அவர்களது சொந்த நிலங்களின் கதி என்ன என்பதைப்பற்றி இன்னும் அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலை ஏற்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெனிக்பாம் மூடப்பட்டது என்பது மோதல் நிலையிலிருந்து, தொடர்ந்து நீடிக்கக் கூடிய ஒரு அமைதியான நிலைக்கு இலங்கை செல் வதை காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க சமிக்ஞை தான் என்று கூறும் ஐ.நா. மன்ற மனிதநேய அலுவலகம், யாழ்ப்பாணத்திலும் வவுனியா விலும், இன்னும் நண்பர்கள் மற்றும் உற வினர்கள் வீடுகளிலும், நலன்புரி நிலயங் களிலும் பல ஆண்டுகளாக வசித்துக் கொண் டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சி னைக்கு நீடித்து நிற்கக் கூடிய தீர்வொன்று காணப்படவேண்டும் என்று கூறியுள்ளது. இலங்கை அரசு, போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு மையாக அமுல் படுத்த வேண்டும் என்றும், இந்த மக்களை நாட்டின் எந்தப்பகுதியிலும் மீண்டும் குடியேற அனுமதிப்பதும், தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப் பட்டு வேறுஇடங்களில் குடியேற நேர்ந்துள்ள மக்களுக்கு, அவர்கள் குடியேறியுள்ள காணி களின் சட்டபூர்வ உரிமை குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதும், நல்லிணக்க வழிமுறையின் முக் கியமான பகுதியாகும் என்று நந்தி கூறினார். போர் முடிந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், சுமார் 700 யஹக்டேயர் நிலப்பரப் பில் மெனிக்பாம் முகாம் உருவாக்கப்பட்டது. அதில் ஒருகட்டத்தில் சுமார் 225,000 இடம் பெயர்ந்த மக்கள் இருந்தனர். அந்த முகா மிற்கு சர்வதேச நிறுவனங்கள் கூடாரம், உணவு, குடிநீர், சுகாதாரம், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அளித்துவந் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts