Ad Widget

மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடந்தவருக்கு அபராதம்

ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோது, கடவையைக் கடந்தவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளித்தார்.

யாழ். கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பான வீதிக்கடவை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மூடியிருந்த போது பாலாவி பகுதியை சேர்ந்த நபர் கடவையை கடந்து சென்றார்.

இதனை அவதானித்த பொலிஸார், அந்த நபரை கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்து, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Posts