Ad Widget

ஆயுதங்களை உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் கைது!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலுள்ள வீட்டொன்றுக்குள் இரகசியமாக ஆயுதங்களை உற்பத்தி செய்த நபர் ஒருவரை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டுக்குள் பாரியளவில் ஆயுத உற்பத்தி இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (03) ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் ஆயுத உற்பத்திப் பிரிவில் நீண்ட காலம் சேவையாற்றிய ஒருவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் உற்பத்தி செய்யும் துப்பாக்கிகள் 5000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Related Posts