Ad Widget

முல்லைத்தீவு இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச்சேர்ந்த 22 வயதான இளைஞனை குற்றப்புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்

போலி விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்றபோதே டுபாயில் வைத்து அந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டள்ளார்.

அவ்விளைஞனை டுபாயிலிருந்து நாடு கடத்தியபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் கடந்த 11 ஆம் திகதி டுபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார். டுபாய் நாட்டு விமானநிலையத்தில் வைத்து அவ்விளைஞனை கைதுசெய்த அதிகாரிகள் எமிரிடேஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே. 650 விமானத்தின் ஊடாகவே அவர், இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கடந்தவாரம் டுபாய் மற்றும் கட்டார் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற வடக்கைச்சேர்ந்த இளைஞர்கள் மூவர் மேற்கண்டமுறையில் நாடுக்கு திருப்பியனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts