Ad Widget

முல்லைத்தீவில் பெண் ஊழியர் மீது பாலியல் பலாத்கார முயற்சி!!

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றையதினம் 15.05.2023 பாதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர் ஒருவர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் குறித்த பெண்ணை காட்டிற்குள் கடத்திசென்று பாலியல் பலாத்கார முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இருவரின் பிடியில் இருந்து பெண் தப்பி சென்று அங்கு பணியாற்றும் ஏனையவர்களை அழைத்துள்ளார்.

இந்நிலையில் காட்டுப்பகுதியில் பெண்ணினை கடத்திய இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts