Ad Widget

முறைப்பாடு செய்தவரேயே சந்தேகப்படும் பொலிஸார்

புன்னாலைக்கட்டுவான் பலாலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திங்கட்கிழமை (24) திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட போது, மோட்டார் சைக்கிள் உரிமையாளரிடம் சாரதி அனுமதிப்பத்திரம், வீதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்திருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில், குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் உண்மையில் திருடப்பட்டுள்ளதா? அல்லது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக குறித்த நபர் பொய் உரைத்துள்ளரா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts