Ad Widget

முத்தம் கொடுத்த இளைஞனுக்கு பிணை

பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அப்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடுமாறும் அவ்விளைஞனுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தெல்லிப்பழை மணல்குளம் பகுதியில் இச்சம்பவம் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்படி இளைஞனை பொலிஸார் கைதுசெய்ததுடன் ஞாயிற்றுக்கிழமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Related Posts