Ad Widget

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக, பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வடக்கு அமைச்சராக டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிப்பார் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயற்பட வடக்கு முதல்வர் மறுத்து வருகின்றமை தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து வடக்கு முதல்வர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை இழைத்துள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் முதலமைச்சருக்கு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், டெனீஸ்வரன் அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, அவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் நீடிப்பார் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts