Ad Widget

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயம்

accidentபருத்தித்துறை, முள்ளிவெளிச் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், இதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை மேற்கைச் சேர்ந்த ஐயாத்துரை தங்கராசா (வயது 66), அருட்குமரன் கிருஷக் (வயது 31), அருட்குமரன் மனுஜா (வயது 30), மீசாலை வடக்கைச் சேர்ந்த சதீஸன் சியாமினி (வயது 23) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts