மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
இவர், மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மருதடி பிள்ளையார் ஆலயத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வடக்குக்கான விஜயம் பற்றி வினவியபோது ‘ஆலய வழிபாட்டுக்காகவே வந்துள்ளேன், அடுத்து காரைநகரில் உள்ள ஆலய கும்பாபிஷேகத்துக்கு செல்லவுள்ளேன்’ எனக் கூறினார்.