Ad Widget

மீன் லொறியில் கேரள கஞ்சா: இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் ஏற்றிச்சென்ற லொறியிலிருந்து கேரளா கஞ்சா கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை மாறாவிலை பொலிசார், சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த லொறியினை சோதித்த போது அதிலிருந்து ஒரு கிலோ 200 கிறாம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் லொறியில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts