Ad Widget

மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ள அஞ்சல் ஊழியர்கள்!

அஞ்சல் பணியாளர்களின் இரண்டு வார கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும், இன்று (வியாழக்கிழமை) முதல் சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாக ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 16 நாட்களாக முன்னெடுத்து வந்த போராட்டம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில், அஞ்சல் ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ள போதிலும், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக சுமார் 15 இலட்சத்திற்கும் அதிகமான உள்ளூர் அஞ்சல்கள் தேங்கிக் கிடக்கும் நிலையில் அவற்றை இன்றுமுதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

வரலாற்றில் அஞ்சல் ஊழியர்கள் அதிக நாட்கள் முன்னெடுத்த போராட்டமாக இந்த போராட்டம் அமைந்துள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts