Ad Widget

மீண்டும் ஜெயம்ரவிக்கு வில்லனான அரவிந்த்சாமி

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த ஹீரோவை வைத்து எடுக்கப்படும் அடுத்தடுத்தப் படங்கள் ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் சாயலிலேயே எடுக்கப்படுவது திரையுலகில் சகஜமான விஷயம். ரசிகர்களுக்கு அலுப்பூட்டக்கூடிய விஷயம் இது என்பதை உணராமலே வெற்றி சென்ட்டிமெண்ட் என்று அதே அம்சங்களை அடுத்தடுத்த படங்களில் வலிய திணிப்பதும் உண்டு.

jeyam-ravi-aravintha-samy

தனி ஒருவன் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தார் ஜெயம்ரவி. அந்தப் படத்தின் வெற்றி அனைவரும் அறிந்தது. தற்போது ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகியுள்ள மிருதன் படத்திலும் ஜெயம் ரவிக்கு போலீஸ் கேரக்டர்தான். மிருதன் படமும் ஜெயம் ரவிக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் படத்திலும் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் – ‘ரோமியோ ஜூலியட்’. வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படத்தை இயக்கியவர் லக்ஷ்மண். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து புதிய படமொன்றை லக்ஷ்மண் இயக்குகிறார். ‘போகன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்தான் மீண்டும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஜெயம் ரவி.

‘ரோமியோ ஜூலியட்’டில் கதாநாயகியாக நடித்த ஹன்சிகாவே இந்தப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார். ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமியே போகன் படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

Related Posts