Ad Widget

மின் கட்டணத்தை செலுத்த அறிமுகமாகும் புதிய முறை!!

மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை அஞ்சல் திணைக்களம் ஊடாகவும், மின்சாரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் வங்கி KIOSK இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாகவும் mCash மற்றும் CEB Care போன்ற செயலி ஊடாகவும் இந்த சேவைகளை மின்சாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதேவேளை தொடர்பில் எழும் பிரச்சினைகள் குறித்து 1987 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்கமுடியும் என்று இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

Related Posts