மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலி, இன்னொருவர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவிப் பிரதேத்தில் வயலில் வேலைசெய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இறந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்துள்ளவர் மல்லாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மல்லாவிப் பகுதியில் தனது வயலில் வேலைசெய்துகொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (62) என்ற விவசாயியே பலியாகியுள்ளார்.

இவரது சடலம் மல்லாவி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மற்றொரு விவசாயியான செல்லையா வசந்தகுமார் (55) என்பவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts